Elegant Rose - Diagonal Resize 2 ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு ஆதாரங்கள் ~ TAMIL ISLAM

வெள்ளி, 16 மார்ச், 2012

ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு ஆதாரங்கள்


عن البراء أن النبي صلى الله عليه وسلم كان يقنت في صلاة الصبح
1.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: பர்ராஃ ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அபூ தாவூத் எண்: 1229
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா 2ஃ211
   
عن انس ان النبي صلى الله عليه وسلم قنت شهرا يدعوا عليهم ثم تركه فاما في الصبح فلم يزل يقنت حتى فارق الدنيا
2. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைமறுப்பாளர்களை சபித்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். பிறகு அதை (மற்ற தொழுகைகளில்) விட்டுவிட்டார்கள். ஆனால், சுப்ஹ் தொழுகையில் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றவரை குனூத் ஓதி வந்தார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 201, தாரகுத்னீ எண் 1712.
عن أنس بن مالك قال: مازال رسول الله صلى الله عليه وسلم يقنت في الفجر حتى فارق الدنيا
 
3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகைப் பிரியும் வரை ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதிக் கொண்டே வந்தார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸன்னப் அப்திர் ரஜ்ஜாக், எண் 4964.
عن علي أن النبي صلى الله عليه وسلم كان يقنت في صلاة الفجر
4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் எண் 1061.
عن البراء بن عازب: أن النبي صلى الله عليه وسلم كان يقنت في الصبح
5. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ஃபர்ராஃ இப்னு ஆசிப் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: தாரமீ எண் 1650
ஸஹாபா பெருமக்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதியதற்கு ஆதாரங்கள்:
عن عبد الله بن معقل قال فنت في الفجر رجلان من أصحاب صلى الله عليه وسلم علي وأبو موسى
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஃகில் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா, பாகம் 2 பக்கம் 211.
عن أبي رجاء العطاردي قال صلى بنا ابن عباس الفجر بالبصرة فقنت
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸ்ரா நகரில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ரஜா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 211
عن الاسود قال صليت خلف عمر بن الخطاب رضى الله عنه في السفر والحضر فماكان يقنت الا في صلوة الفجر
பயணத்திலும் ஊரில் உள்ள போதும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால் நான் தொழுதுள்ளேன். அவர்கள் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: அஸ்வத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 203
عن ابي رجاء قال صلى ابن عباس صلوة الصبح في هذا المسجد فقنت وقرأ هذه الآية: وقوموا لله قانبين
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பள்ளிவாசலில் சுப்ஹ் தொழுதார்கள். குனூத் ஓதினார்கள். (கீழ்காணும் வசனத்தையும்) ஓதிக் காண்பித்தார்கள்.
நீங்கள் குனூத் ஓதி அல்லாஹ்வை வணங்குங்கள்! (அல்குர்ஆன் 2:238)
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 205.
عن ابى سلمة بن عبد الرحمن عن ابي هريرة رضى الله عنه قال والله لانا اقربكم صلوة برسول الله صلى الله عليه وسلم فكان أبو هريرة رضى الله عنه يقنت في الركعة الاخيرة من صلوة الصبح بعد مايقول صمع الله لمن حمده
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகையை உங்களை விட அருகில் இருந்து அறிந்தவன் நான். இதை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சுப்ஹ் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமான் ஹமிதஹ்' என்று கூறியதற்குப் பின்னால் குனூத் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஸல்மா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 206
عن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يقنت في صلوة الصبح بهؤلاء الكلمات اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شرما قضيت انك تقضى ولا يقضى عليك انه لا يذل من واليت تباركت ربنا وتعاليت
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையின் போது, அல்லாஹும்மஹ்தினா…. (எனத் தொடங்கும் வாசகங்களை) குனூத்தில் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 210.
குனூத் ஓதும் போது கையை உயர்த்துதல்:
عن خلاس بن عمرو الخجري عن ابن عباس أنه صلى فقنت بهم في الفجر بالبصرة فرفع يديه
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸ்ரா நகரில் மக்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்தினார்கள். இரு கைகளையும் உயர்த்தி குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: கிலாஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 215
عن ابى عثمان أن عمر رفع يديه في قنوت الفجر
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஜ்ருடைய குனூத்தில் இரு கைகளையும் உயர்த்தினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ உத்மான் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 215.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates